About Us

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான பல்வேறு உதவிகளை இயன்ற அளவில் செய்வதற்காகவும், மேலும் சமுதாயத்தில் கடைபிடிக்கவேண்டிய மேனமையான ஒழுக்க நெறிகளையும், நமது பாரம்பர்யத்தை காப்பாற்றவேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி அவர்களை நம்முடைய நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உடைய குடிமகன்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை தான் மாத்ருசாயா பௌண்டேஷன். மேற்கூறிய பண்புகள் நம் எல்லோரிடமும் ஒற்றுமையையும் பிறரை மதிக்கக் கூடிய கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. www.mathruchaya.org

காயத்ரி ஹோமம்

நமது காஞ்சி காமகோடி பீடம் ஆச்சார்யர்களின் அனுக்ரகதுடன் ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கு மாம்பலம்சங்கர மடத்தில் காயத்ரி ஹோமம் நடைபெறும். ஹோமம் ஒன்பது மணிக்குஆரம்பித்து மதியம் பனிரெண்டு மணியளவில் முடிவடையும். ஹோமம் முடிந்தவுடன் மகா பிரசாதம் விநியோகிக்கப்படும். காயத்ரி ஹோமம் புகைப்படங்கள்